Saturday 4 February 2017

70- வது சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கு இலவச மரக்கன்று வழங்கப்பட்டன

     
           ஆயிரம் மரங்களை வெட்டி வீட்டை கட்டுகிறோம்           
      அந்த ஒவ்வொரு வீட்டின் முன்பு ஒரு மரக்கன்றை நடுவோமே
            மரம் வளர்ப்போம் மனித இனத்தை காப்போம்....!                                           


         Younger's Educational Trust கல்வி அறக்கட்டளை சார்பாக 15/08/2016 வேலூர்  மாவட்டம் பொய்கை  கிராமத்தில்  உள்ள பள்ளியில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடதப்பட்டன மேலும் மரத்தின் பயன்கள் மற்றும் தேசத்தலைவர்கள் என்ற தலைப்பில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வழங்கபட்டது மொத்தம் 20 பரிசுகளும் மேலும் 300 மாணவ  மாணவியர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
       

Thursday 20 October 2016

மரம் வளர்ப்போம் வாருங்கள்...!


பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.

இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.

காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில்  எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை, எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.